உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

வெற்றுக் காசோலைகளில் மோசடியாக ஒப்பமிட்டமை தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.சாந்தசீலனை விசாரணை செய்வதற்காக மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றை வடமாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் நியமித்துள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த உத்தியோகத்தர் 33 வெற்றுக் காசோலைகளில் மோசடியாக ஒப்பமிட்டமையானது NP/11/MN/ACLG/2023/01 இலக்க 2024.01.02 ஆம் திகதி கணக்காய்வு அவதானிப்புக்கள் – 2023 என்ற தலைப்பிடப்பட்ட மாகாண உள்ளக கணக்காய்வாளரது அறிக்கையின் பந்தி இல 3.1 மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

பந்தி இல 3.2, 3.3, 3.4 மற்றும் 3.5 ஆகியவற்றிலும் காசோலை முறைகேடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

குறித்த கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்ட மேற்படி அலுவலர் தொடர்பான ஐயவினா தொடர்பில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஆரம்ப புலனாய்வு குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக் குழுவின் தலைவராக வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கே.சுரேஷ்குமார் மற்றும் உறுப்பினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி.ச.ராதிகா மற்றும் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் அலுவலக பொறியியல் சேவைகள் நிர்வாக உத்தியோகத்தர் ரி.அருங்கலைச் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காசோலை மோசடி தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவான விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் அண்மையில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்ற போது மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் வடமாகாண ஆளுநரின் உத்தரவில் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0