கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(14) பகல் நடைபெற்றது.
யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்கான வணக்க நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வும் தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையிலே இன்றைய தினம் கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் முன்னதாக உயிரிழந்தவர்களுக்கான சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.





