உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

தமிழின படுகொலை வாரமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாளான இன்று கொட்டும் மழையிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி வழங்கலும் நடைபெற்றது.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் மற்றும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் அவலத்தினை குறிக்கும் வகையிலான கஞ்சி வழங்கப்பட்டது. கொட்டும் மழையிலும் இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
எங்களுடைய தமிழ் இனம் இன அழிப்பு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அந்த நாளை நினைவு கூறுகின்ற முகமாகவும், கொல்லப்பட்ட உறவுகள் ஆன்ம விடுதலைக்காகவும், எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு எவ்வாறு தமிழ் மக்களுக்கான இனப்படுகொலை திட்டமிட்ட வகையிலே கொத்தணி குண்டுகளால் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட நாளை அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இந்த நிகழ்வு அமைகின்றது.

அதற்கு அப்பால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்காகவும் நீதி வேண்டி இந்த சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசுக்கும் இந்த விடயம் காலங்காலமாக ஞாபகப்படுத்தப்பட்டு, தமிழர் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிச் செய்த மக்களை நினைவு கூறுகின்றோம். அந்த நெருக்கடியான சூழ்நிலையிலே தங்களுடைய விடுதலை போராட்டத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் உயிர்களை அர்ப்பணித்த மக்களை நினைவு கூர்ந்து, அடுத்த சந்ததிக்கு எங்களுடைய இனம் எவ்வாறு கடந்த காலங்களிலே கொல்லப்பட்டது என்ற செய்தியையும், இனப்படுகொலை செய்தியையும் சொல்லுகின்ற இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலே உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

அந்த அடிப்படையிலே உண்மையிலே நான் இந்த கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றியத்திற்கும், அக்கரைப்பற்று பிரதேசத்திற்குரிய இந்து குருமார் ஒன்றியத்திற்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.

உணர்வுபூர்வமாக தங்களுடைய சமய பணிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காக அவர்களுடைய சேவையை பாராட்டுவதோடு, உண்மையாக அவர்களுடைய தன்னார்வ செயல்களுக்கு என்னுடைய அனுசரணையையும் ஒத்துழைப்பையும் வழங்கி அவர்களோடு பயணிப்பேன் என்ற உறுதிமொழியை கூறிக்கொண்டு, தமிழ் மக்களுக்கான நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0