உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் அட்டாளைச்சேனை றவ்ழத்துல் அத்பால் பாலர் பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வானது அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுடீன் தலைமையில் இடம்பெற்றது.

‘வாயின் மகிழ்ச்சி வாழ்வின் மகிழ்ச்சி’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் யூ.ஹபீப் முஹம்மட் பிரதம அதிதியாகவும், நடமாடும் பல் வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எம்.பைறுஸ் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

ஹன்ழலத் பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளி தலைவர் மௌலவி எம்.ஏ.முபீன், அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் என்.கே.எம்.மிஸ்வர், மேற்பார்வை பாடசாலை பல் சிகிச்சையாளர் கே.ஜனலோஜினி, சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.பைறூஸ், பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எச்.பஹ்மி, பொதுச் சுகாதார மருத்துவ மாது திருமதி ஐ.றஹ்மத்தும்மா, பாடசாலை பல் சிகிச்சையாளர் திருமதி ஹசீனா சாதிக், எஸ்.எல்.மக்சூத் (PDO) உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பின்வரும் முக்கிய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பற்சிதைவுத் தடுப்பு: மாணவர்களின் பற்களைப் பாதுகாப்பதற்கான ‘புளோரைட் வார்னிஷ்’ (Fluoride Varnish) சிகிச்சை வழங்கப்பட்டது.

செயல்முறை விளக்கம்: சரியான முறையில் பல் துலக்கும் நுட்பங்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் செயல்முறை ரீதியாக விளக்கப்பட்டது.

ஆரோக்கிய உணவு: பற்களின் உறுதிக்கும் வாய் ஆரோக்கியத்திற்கும் தேவையான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து நிபுணர்கள் விளக்கமளிக்கப்பட்டன.

முற்கூட்டிய கண்டறிதல்: வாய்வழி நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கும் முறைகள் குறித்து சுகாதார உத்தியோகத்தர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கான பல் பரிசோதனை உள்ளிட்ட வைத்தியர்களின் ஆலோசனைகள் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0