உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட சந்தை திருத்தப்படவில்லை என வர்த்தகர்கள் கவலை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதிகள் கடந்த 30 .04.2026 அன்றைய தினம் வீசிய மினி சூறாவளி காற்றின் காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதியின் கூரை முற்றும் முழுதாக தூக்கி வீசப்பட்டு பாதிப்புக்குள்ளானது

இன்று வரை சிரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. பரந்தன் வர்த்தக சந்தையின் கூரை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாத  காரணத்தினால் வியாபார நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் காய்கறி வியாபாரிகளின் காய்கறிகள் நனைவதால் மீண்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்

மழையில் நனைந்த வண்ணம் தொடர்ச்சியாக வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தை பாதுகாப்பு இன்மை காரணமாக நுகர்வோரும் காய்கறிகள் கொள்வனவு செய்வதற்கு இப்பகுதிகளுக்கு வருவது குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்

இதன் காரணமாக தாம் மிகவும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும் இங்கு வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வியாபாரிகள் தெரிவித்தனர் 

எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து இப்பகுதியில் மேற்கொள்வதற்கு  மிக விரைவில் கட்டடத் தொகுதியை புனரமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவித்தனர் குறித்த சந்தை தொகுதி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0