உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு (09) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இரண்டு வாகனங்கள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வாள், கத்திகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக படுகாயமடைந்த ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கும், மற்றையவர் அனுராதாபுரம் வைத்தியசாலைக்கும் மற்றும் ஒருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதுடன் காயமடைந்த ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கப் ரக வாகனத்தில் சென்ற குழு ஒன்றை மற்றுமொரு கப் வாகனத்தில் சென்ற குழுவினர் மோதி வாகனத்தை விபத்துக்குள்ளாக்கியுள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்த நான்கு பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ள இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வாள்கள், கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனம் மற்றும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கப் வாகனம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட விசேட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0