உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் மாநாடு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

“ஊர் திரள்வோம், உலகிற்குச் சொல்வோம்” எனும் முழக்கத்துடன், ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சி பாரதி ஸ்டார் ஹோட்டலில் இன்று காலை 10:00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில், சமூக செயற்பாட்டாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

குறித்த மாநாட்டில் உரிமைக் குரல்:
உள்நாட்டு பொறிமுறைகளில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சியுள்ள நிலையில், சர்வதேச ரீதியிலான பொறிமுறைகளின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக்கொள்வதே நோக்கம் என்பது இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சுயநிர்ணய உரிமை:
“சுயநிர்ணயம்” என்பது தமிழர்களின் அடிப்படை உரிமை என்பதையும், அதனை அடகு வைக்கவோ, கைவிடவோ அல்லது அழித்தொழிக்கவோ முடியாது என்பதை மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

திருகோணமலைப் பிரகடனம்:
ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தினால் முன்வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க “திருகோணமலைப் பிரகடனத்தை” வலுப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு அமைந்தது.

மக்கள் எழுச்சி:
“எம் உரிமைகளை நீக்கக்கூடிய எந்தவொரு சரணடைதலையும், தலைவணங்கலையும் இன்று வரை நிகழ்த்தவும் இல்லை, இனி நிகழ்த்தப் போவதும் இல்லை” என்ற உறுதியான நிலைப்பாட்டை சமூக செயற்பாட்டாளர்கள் இம்மாநாட்டின் வாயிலாக உலகிற்குப் பறைசாற்றினர்.

நிகழ்வின் இறுதியில், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த மாநாடானது, கிளிநொச்சி மண்ணில் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0