உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு!

Uncategorized 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் தம்மோடு கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

மே தினம் தொடர்பாக இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள காலாவதியான அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்த அவர், தற்போதைய அரசியல் சூதாட்டங்களிலிருந்து விலகி, கொள்கை அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டார்.

சமூக ஜனநாயகம் மற்றும் சமூக சந்தைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட நடுத்தரப் பாதையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அனைவருக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் எமது வேலைத்திட்டத்தில் கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும், முற்போக்கு சிந்தனை கொண்ட அனைத்து மக்களுக்கும் மிகுந்த மரியாதையுடன் அழைப்பு விடுக்கின்றேன்.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பாரிய மே தினக் கூட்டத்தில் இலட்சக்கணக்கில் திரண்டு ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0