காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்.!
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை வலுப்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் Wijith Rohan. தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் கிரிசாந்தி ரத்னாயக்கா, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், இழப்பீட்டுக்கான அலுவலக உத்தியோகத்தர்கள், தெரிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



