குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!
கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தில் நேற்று பிற்பகல் மூவர் நீராடிக்கொண்டிருந்த போது ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்றது.
இந் நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களினால் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த 32வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.