உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் கைலாயபிள்ளை சிந்துயன் தலைமையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக ஆலய வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து முதல் கல் எடுத்துவரப்பட்டு மைதானத்தில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டன.

முதல் கல்லினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாட்டிவைக்க சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், கிளி சோரன்பற்று கணேச வித்தியாலய அதிபர் சோமசுந்தரம் சிவதாசன், சோரன்பற்று கிராம அலுவலர், அருள்பிரகாஸ் சுபாசினி உட்பட பலரும் நாட்டி வைத்தனர்.

தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

கருத்துரைகளை நிகழ்வின் பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் நிகழ்த்தினர்.

இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0