கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!
இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் தடை உத்தரவுகளுக்கு எதிராக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று பகல் (26) பகல் 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இலக்கிய படைப்பாளிகள், பொது அமைப்பு சார்ந்தோர், அரசியல் கட்சி சார்ந்தோர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

