உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இலங்கையை வந்தடைந்த வெளிநாடொன்றின் பாய்மரக் கப்பல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI BIMA SUCI – 945’ என்ற பாய்மரக் கப்பல், நல்லெண்ணப் பயணத்திற்காக இன்று ஏப்ரல் 15 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

ஆசியான் பிளஸ் கேடட் செயில் (APCS) – 2026 திட்டத்தின் கீழ், இந்தோனேசிய கடற்படையின் கேடட் அதிகாரிகள் உட்பட இருபத்தாறு வெளிநாடுகளைச் சேர்ந்த கேடட் அதிகாரிகளும் இக்கப்பலுடன் வந்துள்ளனர்.

கடற்படை மரபுகளின்படி, கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையால் இக்கப்பல் வரவேற்கப்பட்டது.
நாட்டை வந்தடைந்த KRI BIMA SUCI – 945 என்ற பாய்மரக் கப்பலின் கட்டளை அதிகாரி, தளபதி சுகெங் ஹரியந்தோ என்பவர் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், இலங்கையில் கப்பல் தங்கியிருக்கும் போது, ​​இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் கடற்படைப் பணியாளர்கள் மற்றும் கடற்படைப் பயிற்சியாளர்கள் பங்கேற்கவும், நாட்டில் உள்ள பல முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0