உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள புதிய விசா விதிமுறைகள்!

Uncategorized 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இலங்கை உள்ளிட்ட தெரிவு
செய்யப்பட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் வதிவிட விசாக்களுக்கு (Residence Visas) விண்ணப்பிக்கும் போது பொலிஸ் நடத்தைச் சான்றிதழை (Police Clearance Certificate) சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விசா விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைபவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சோதனை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2026 ஏப்ரல் முதல் இந்த புதிய விதி நடைமுறைக்கு வருகிறது.

புதிய விதிமுறைகளின் கீழ் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆதாரத்தை வழங்க வேண்டும். இந்தத் சான்றிதழ் கட்டாயமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் நடத்தைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கையுடன் பின்வரும் நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எகிப்து – இந்தோனேசியா -நேபாளம் – ஆப்கானிஸ்தான் – ஈராக் – கென்யா – நைஜீரியா – கானா ஆகிய நாடுகளாகும்.

இந்த நாடுகளின் பட்டியல் அவ்வப்போது மாற்றப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக முக்கிய சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0