உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சித்திரைப் புத்தாண்டில் மது பிரியர்களுக்கு ஆப்பு ..!மதுபானசாலைகளுக்குப் பூட்டு..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி ஆணையாளருமான ஏ.ஏ. ரொஷான் பெரேரா விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் அனுமதியுடன் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களும் குறிப்பிட்ட இரண்டு தினங்களிலும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி, வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானசாலைகள், மதுபானம் விற்பனை செய்யப்படும் விருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகிய இடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி புத்தாண்டு தினங்களில் எவரேனும் மதுபான விற்பனையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக கலால் திணைக்களச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0