உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அமெரிக்காவில் சீன ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்: பீஜிங் கடும் கண்டனம்

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் செமிகண்டக்டர் (Semiconductor) துறையில் உதவி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்த டன்ஹாவ் வாங் (Danhao Wang) என்பவர், கடந்த மார்ச் 19 ஆம் திகதி பல்கலைக்கழகக் கட்டடத்திலிருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் நடப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாக, அமெரிக்கச் சட்ட அமுலாக்கத் துறையினர் அவரிடம் “கடுமையான முறையில்” விசாரணை நடத்தியதாகச் சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இது ஒரு தற்கொலை முயற்சியாக இருக்கலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் சந்தேகிக்கும் நிலையில், சீன வெளியுறவு அமைச்சு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் இத்தகைய விசாரணை முறைகள் சீனக் குடிமக்களின் உரிமைகளை மீறுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சீர்குலைப்பதாகச் சீனா சாடியுள்ளது

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, தேசியப் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மீதான கண்காணிப்பைக் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இராணுவத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆராய்ச்சியாளர்களின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், வாங்-கின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு ஜேன் வூ என்ற சீன-அமெரிக்க விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணம் அமெரிக்காவில் உள்ள சீன கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0