உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் கொட்டகலை பிரதேசத்தில் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.லோரன்ஸுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

வேல்ட்விஷன் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில்,
தற்போது பல இடங்களில் குடிநீர்ப் பிரச்சனை பாரிய சவாலாக மாறியுள்ளது. எனவே, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை வகுப்பது தொடர்பில் பேசப்பட்டதுடன் குறிப்பாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பல இடங்களிலே வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு, அவர்களது பராமரிப்பிலே இருக்கின்ற குடிநீர் வழங்கல் வேலைத்திட்டங்களை முறையாக பிரதேச சபைக்கு பொறுப்பெடுத்து அதனூடாக மக்களுக்கு துரிதமான நீர் விநியோகச் சேவையினை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் பல குடிநீர் விநியோகத் திட்டங்களையும் சபையுடன் இணைந்து செயல்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலே பிரதேச சபையின் பங்களிப்பைப் பெற்று பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வேல்ட்விஷன் நிறுவனத்திற்கு சொந்தமான நீர்த்தாங்கி ஒன்றையும் கொட்டகலை பிரதேச சபைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வேர்ல்ட் விஷன் நிறுவனமும் கொட்டகலை பிரதேச சபையும் இணைந்து பல நலன்புரிச் சேவைகளை பொதுமக்களுக்கு செய்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0