உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி தலைமையில் விசேட கள ஆய்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மட்டக்களப்பின் குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழியை இன்று (17) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. பிரதீபன் தலைமையில் விசாரணை குழு நேரில் ஆய்வு செய்தது.1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணித்த முஸ்லிம் பயணிகள் விடுதலைப்புலிகளால் இடை மறிக்கப்பட்டு, குருக்கள்மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் ஒரு பகுதியாக இந்த கள விஜயம் நடைபெற்றது.


ஆய்வுக் குழுவில் பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட இடம் தற்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கூறியதன்படி, மனித புதைகுழி தொடர்பான முதல் கட்ட அகழ்வாய்வுபணிகள் எதிர்வரும் மார்ச் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிரூபிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த அகழ்வாய்வுக்காகவே விசேட கள விஜயம் நடத்தப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0