உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

அரசுப் பணிகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவே புதன் விடுமுறை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அரசாங்க சேவைகள் நீண்டகாலத் தடங்கல் இல்லாமல் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் புதன்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கூறியதாவது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல் சூழலால் ஏற்பட்ட எரிபொருள் விநியோகச் சிக்கனத்தை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டதாகும்.


அவர் மேலும் விளக்கமாக கூறியதாவது, சாதாரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள் தொடர்ச்சியாக வரும்போது அலுவலகப் பணிகள் சில நாட்களுக்கு பின்தங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் பிரச்சினைகள் உருவாகலாம்.

இதனைத் தவிர்க்க, வாரத்தின் நடுப்பகுதியில் உள்ள புதன்கிழமையிலான விடுமுறையால், அரசாங்க நடவடிக்கைகள் தடங்கல் இல்லாமல் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட முடியும். அதேவேளை, பொதுச் சேவைகள், அத்தியாவசிய பணிகள் முழு வாரமும் இயங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இது வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0