புதன்கிழமை விடுமுறை எதிரொலி; சபை அமர்வு நாளை இரத்து.!
அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விசேட அரச விடுமுறை காரணமாக, நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை விசேட அரச விடுமுறை தினமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற அமர்வுகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
நாளைமறுதினம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஏற்கனவே திட்டமிட்டபடி சபை அமர்வு இடம்பெறும்.
நாளை நாடாளுமன்றம் கூடாத போதிலும், நாளைமறுதினம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஏற்கனவே திட்டமிட்டபடி சபை அமர்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி சேமிப்பு மற்றும் அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு முன்னெடுத்துள்ள இந்தத் தீர்மானம், நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.