யாழில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு.!
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பட்டினசபை வீதி, சங்கானை என்ற முகவரியைச் சேர்ந்த தியாகராஜா கிந்துஜன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் சுருக்கிட்டு தூக்கில் தொங்கி உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குறித்த இளைஞன் கடந்த சில நாட்களாக கடன்தொல்லையால் பாதிக்கப்பட்டு வந்ததாக உறவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.