QR நடைமுறையால் வாகன உரிமை மாற்றம் செய்தோர் அவதி.!
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாகன உரிமை மாற்றம் செய்தவர்கள் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் அந்தரிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
மத்திய கிழக்கில் ஏற்ப்பட்டுள்ள போர் பதற்ற நிலைமை காரணமாக நாட்டில் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்குடன் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா காலப்பகுதியில் ஏற்கனவே பதிவு செய்து தங்களது தொலைபேசி இலக்கத்தினையும், வாகனத்தையும் மாற்றாது வைத்திருப்பவர்கள் இலகுவாக அதனை புதுப்பித்துக்கொள்வதற்கான வசதிகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பழைய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் அல்லது வாகன உரிமை மாற்றம் செய்தவர்கள் இந்த QR அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் வன்னி மாவட்டத்தில் அதிகமான பொதுமக்கள் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் பழைய உரிமையாளர்களை தேடியலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வாகன உரிமை மாற்றம் செய்தவர்கள் இலகுவாக QR அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப ரீதியான அணுகலை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.