உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மத்திய கிழக்கு போர் நீண்டால் இலங்கைக்குப் பாரிய சிக்கல்!- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பகிரங்க எச்சரிக்கை.

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் நீண்ட காலம் தொடர்ந்தால் அது இலங்கையின் எதிர்காலத்திற்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திஸ்ஸமஹாராம பகுதியில் அமைந்துள்ள அகுருகொட ஸ்ரீ மங்களராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்தியத்தின் திறப்பு விழாவில் இன்று (வியாழக்கிழமை) கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் சர்வதேச போர்நிலை நீண்ட காலம் நீடித்தால் அது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

அத்துடன், தமது ஆட்சிக் காலத்தில் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக சேவை செய்தவர்களை மதிப்பதே உரிய செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இது பழிவாங்கும் காலம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் தற்போதைய அரசு பௌத்த சாசனத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்குகின்றதா என்ற கேள்வி எழுகிறது என்றும், தாம் ஆட்சியில் இருந்த காலத்தில் பௌத்த சாசனம் உயர்ந்த நிலையில் பேணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கத் தேவையில்லை என்றும், அதனைப்பற்றி நாட்டு மக்களே நன்றாக அறிந்துள்ளனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0