தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!
இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருவதால் வீதிகள் வழுக்கும் நிலையில் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டிய நிலை உள்ள போது எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனை தலைக்கவசம் இல்லாமல் உந்துருளியில் ஏற்றி மிக வேகமாக பயணித்ததை காண கூடியதாக இருந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு தலைகவசம் இல்லாமல் உந்துருளியில் செல்பவர்களை ஹட்டன் பகுதியில் உள்ள போக்குவரத்து பொலிஸார் இனங்கண்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.