உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

அடிப்படை மனித உரிமைகளை மீறிய அதிகாரிகள் சொந்தப் பணத்தில் நஷ்டஈடு செலுத்த உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மிதிகம பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை தாக்கி துன்புறுத்திய சம்பவத்தில், மதுவரி திணைக்களத்தின் 7 அதிகாரிகள் அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.உயர் நீதிமன்றத்தின் உத்தரவப்படி, குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் தலா 75,000 ரூபாய், ஏழுவரும் இணைந்து மொத்தம் 525,000 ரூபாயை மனுதாரருக்கு நஷ்டஈட்டாக வழங்க வேண்டும். இந்த தொகையை தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்.


சம்பவம் 2023 ஜனவரி 4ஆம் திகதியன்று நிகழ்ந்தது. மனுதாரர் தனது உணவகத்திற்கு வெளியே ஏற்படும் சலசலப்புகளை பதிவு செய்ய கண்காணிப்பு கருவிகளை பரிசோதித்ததாகவும், அதிகாரிகள் தமது ஊழியர்களை தாக்கிய காட்சியை கண்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர், அதிகாரிகள் தாங்கள் பொலிஸார் எனக் கூறி, தடிகளால் தாக்கியதும் பெட்சீட் மூலம் கண்களை கட்டித் தாக்கியதும், மதுபானப் போத்தல்கள் குறித்து கேள்வி எழுப்பியதும் மனுதாரர் குற்றஞ்சாட்டினார்.


மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இந்த செயலின் மூலம் அதிகாரிகள் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என ஏகமனதாக தீர்ப்பளித்தது.மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி நிலுகா திஸாநாயக்க, பிரதிவாதிகள் தரப்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க முன்னிலையானனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0