தெற்கு கடற்பரப்பில் ஈரானியக் கப்பல்கள் ஏற்படுத்திய சூழல் பாதிப்புகள் கண்காணிப்பு.!
இரண்டு ஈரானியக் கப்பல்கள் தெற்கு கடற்பரப்பில் பிரவேசித்ததைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மீது ஏற்படும் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 7 ஆம் திகதி முதல் ஆழ்கடல் ஆய்வுகள் மற்றும் பவளப்பாறைகளுக்கு அருகில் மூழ்கி ஆய்வு செய்யும் நடவடிக்கைகள், கடற்படை மற்றும் கடலோரக் காவற்படை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஹிக்கடுவை மற்றும் தொடங்கந்தூவ பகுதிகளில் கரையோரம் எண்ணெய் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் ஒதுங்கியுள்ளன.
இவை ஈரானியக் கப்பல்களில் இருந்து வந்தவையா என உறுதிப்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகள் மேலதிக ஆய்விற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குஅனுப்பப்பட்டுள்ளன.
வனவாழ் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிப்பதற்கேற்ப, இதுவரை கடல் ஆமைகள் அல்லது பிற கடலோர விலங்குகள் பாதிக்கப்படாமை உறுதியாக உள்ளது. பவளப்பாறைகளின் பாதிப்புகள் குறித்து அறிய, ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்படுவதை எதிர்பார்க்கிறோம் என்று கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை பொது முகாமையாளர் ஜகத் குணசேகர தெரிவித்தார்.