சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா வத்திராயனில் நடைபெற்றது.!
சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா இன்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சிவகுமார் தலைமையில் மாலை 3.15 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை புரிந்த பெண்மணிகளை கௌரவிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இவ்விழாவில் வடமராட்சி கிழக்கு பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் முரளிதரன், வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் தங்கரூபன், வத்திராயன் கிராம உத்தியோகத்தர், சிகரம் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் வடமாகாணசிகரம் அமைப்பாளர் உதரபாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.