நெல்லியடியில் வாள்வெட்டு: மாமியார் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மாமியார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மாமனார் படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவம் இன்று இரவு வடமராட்சி, பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்களுக்கு அமைவாக, மனைவியின் தந்தையாரை வாளால் தாக்கி படுகாயப்படுத்திய பின்னர், மனைவியின் தாயாரை வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தையடுத்து பருத்தித்துறைபொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான ஐந்துக்கும் மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் பின்னர், குறித்த சந்தேக நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.