உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மின்சார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மின்சார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் புதிய மின்சார நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


தற்போது நிலவும் சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாட நாளை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டிருந்த மின்சார விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 09 ஆம் திகதி பிற்பகல் முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்தடை மற்றும் மின்சார பராமரிப்பு பணிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.


ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள நாளைய கலந்துரையாடலுக்குப் பின்னரே தொழிற்சங்கப் போராட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மின்சார கட்டமைப்பில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என மின்சார தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

48 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

30 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

51 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

46 0 0