பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.!
டெலிகிராம் செயலி மூலம் இணையவழி வணிகத்தில் பெருந்தொகை பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பட்டுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் நேற்று வெள்ளிக்கிழமை (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக மக்களை ஈர்த்து, இணையவழி தொழில் மூலம் பணம் ஈட்ட முடியும் எனக் கூறி இப் பண மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களால் வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாய் மொத்தத் தொகையில், 66,999 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவு இச் சோதனையை நடத்தி சந்தேகநபரை கைது செய்தனர்.
மேலும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இச் சம்பவம் தொடர்பான மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.