தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்.!
இன்று (19) சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 வரையிலான காலப்பகுதியில் ஹட்டன் எபோட்சிலி தோட்ட ஜந்து பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தி போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஹட்டன் நகரில் சேரும் நாளாந்த கழிவுகளை எமது தோட்ட பகுதியில் கொட்டுவதற்கு எதிராக இந்த போராட்டமும் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஹட்டன் நகரில் இருந்து குப்பைகள் எமது தோட்ட பகுதியில் கொட்டுவதற்கு இடமளிக்க முடியாது. எமது தோட்ட பகுதியில் உள்ள ஐந்து பிரிவுகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நகரில் சேரும் நாளாந்த குப்பைகளை எமது தோட்ட பகுதியில் கொட்டுவதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயமும், துர்நாற்றம் வீசும் அபாயமும், நுளம்புகள் மற்றும் ஈக்கள் பரவும் அபாயமும் ஏற்படும்.
ஆகவே, எமது எபோட்சிலி தோட்ட ஜந்து பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் ஒரே நோக்கத்துடன் எமது பகுதியில் அவ்வாறான கழிவுகள் கொட்டுவதற்கு இடமளிக்க முடியாது என கோரிக்கை முன்வைக்கின்றனர்.
