உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ரிசாத் பதியுதீன்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
25 பார்வைகள்

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று இரவு (18) நேரில் விஜயம் செய்தார்.

அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த அவர், அவர்களுக்குத் தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்ததுடன், அனோஜனைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த எம்.பி ரிஷாட் பதியுதீன்,
“அனோஜனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனோஜனின் குடும்பத்தினர் கொண்டுள்ள அதே உணர்வுடனும் கவலையுடனுமே நாங்களும் முஸ்லிம் சமூகமும் இருக்கின்றோம்.

எனவே, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலமாகச் சவூதி அரேபிய மன்னருக்கு அவசர வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினூடாகவும் இவ் விவகாரத்தில் தலையிட்டு அனோஜனின் விடுதலை தொடர்பில் சவூதி அரசாங்கத்திடம் கருணை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது குறித்துப் பேசியுள்ளதாகவும், அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாகச் செயற்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அனோஜன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் போது தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

இதன்போது, முஸ்லிம் சமூகம் இந்த விவகாரத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இவ் விஜயத்தின் போது கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சீ. எம். முபீத் உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பெண்ணொருவர் உ**யிரிழப்பு.!

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34)…

29 0 0
இலங்கை செய்திகள்

யாழில் கடலாமைகளுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றையதினம் சனிக்கிழமை இரண்டு கடலாமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடலாமைகளுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

32 0 0
இலங்கை செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் தில்லுமுல்லு.!

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் இருந்து பிரதேச சபையின் உறுப்பினர் தயாபரன் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது…

31 0 0
இலங்கை செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.!

டெலிகிராம் செயலி மூலம் இணையவழி வணிகத்தில் பெருந்தொகை பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பட்டுவத்தை பகுதியைச்…

12 0 0