கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!
இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை மற்றும் இசைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘கீதா ஆர்ட்ஸ்’ தயாரிக்கவுள்ளது.
‘ஜெர்ஸி’ மற்றும் ‘கிங்டம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னூரி இப்படத்தை இயக்கவுள்ளார்.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இறுதியாக ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சிறப்பம்சமாக, உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இசை உலகின் முக்கிய ஆளுமையான எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பது, அவருக்கு புதியதொரு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.