உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

மட்டக்குளியில் மூவர் உ*யிரிழந்தமைக்கு காரணமான காரின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
38 பார்வைகள்

கொழும்பு, மட்டக்குளி – பெர்குசன் வீதியில் 3 பேர் உயிரிழந்தமைக்குக் காரணமான வீதி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஞ்சா போதையில் காரைச் செலுத்தி இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 13 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.

விபத்து இடம்பெற்ற சமயத்தில் சாரதி கஞ்சா போதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

36 0 0
இலங்கை செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணை சர்ச்சைக்கிடையே சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரிலுள்ள பிரபல…

30 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

31 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

44 0 0