உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

ஷிராந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
32 பார்வைகள்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணை சர்ச்சைக்கிடையே சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரிலுள்ள பிரபல ‘மவுண்ட் எலிசபெத்’ வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணைக்கான முதற்கட்ட அறிவித்தல் கடிதம் தங்காலையில் உள்ள ‘கார்ல்டன் ஹவுஸ்’ இல்லத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஷிராந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயல்வதை அறிந்த நிதிக் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழுவினர், நேற்று அதிகாலை விமான நிலையத்துக்கு விரைந்து சென்று புறப்படும் நுழைவாயில் அருகே வைத்து அவரிடம் கடிதத்தை ஒப்படைக்க முயன்றனர். அந்த அறிவித்தலை அவரது உறவினர் ஒருவர் ஏற்றுக்கொண்டார்.

ஷிராந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் எனவும், செப்டெம்பர் 24 ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி ‘சிரிலிய சவிய’ நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பார் எனவும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

37 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

36 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

39 0 0
இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

39 0 0