நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு
மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய தினம் (17) சிறப்பாக இடம்பெற்றது.
2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவ் ஆலயத்திற்கு ராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நட்டப்பட்டது.
இயற்கையின் அருள் அம்பிகையின் ஆசி பிரதேச மக்களின் பெரும் முயற்சியால் பஞ்சதள ராஜகோபுரம் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திங்கட்கிழமை (14) அதிகாலை 5.30 மணி முதல் கர்மா ரம்பம், செவ்வாய்க்கிழமை(15) காலை 6.30மணி முதல் புண்ணியாவாசனம், விசேட சந்தி, யாக பூஜை,புதன்கிழமை(16) காலை 8.00 மணி முதல் அடியார்களின் எண்ணைக் காப்பு நடைபெற்று இன்று வியாழக்கிழமை (17) ஆம் திகதி காலை 7.30 மணி முதல் புண்ணியாவாசனம் யாகபூஜை, குண்ட பூஜை, குறித்த சுப முகூர்த்த வேளையில் இராஜகோபுர, ஸ்தூப லின்க, ஸ்தூபி அபிஷேகங்கள் புனித நீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.







