உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு 25 வருட சிறைத் தண்டனை!

உலக செய்திகள் 9 மணி நேரம் முன்
52 பார்வைகள்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசி (Hashim Thaci) மீதான போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற விசேட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செர்பியாவிடமிருந்து கொசோவோ சுதந்திரம் பெறுவதற்காக நடைபெற்ற போரின் போது (1998-1999) இடம்பெற்ற கொலை, சித்திரவதை, கொடூரமான முறையில் நடத்துதல் மற்றும் தன்னிச்சையாகக் கைது செய்தல் ஆகிய நான்கு போர்க்குற்றச் சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள கொசோவோ விசேட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதற்காக 58 வயதான ஹாஷிம் தாசி, சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியிருந்தார்.

கொசோவோ விடுதலைப் படையின் தலைவர்களில் ஒருவரான ஹாஷிம் தாசி உட்பட நான்கு பேர் மீதும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இவர்கள் மீது அதிகபட்சமாக 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசுத்தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்த போதிலும், அவர்கள் அனைத்துச் சாட்டுகளையும் மறுத்து வந்தனர்.

தண்டனை அறிவிக்கப்பட்ட போது, நீதிமன்றத்தில் அமைதியான முறையில் நின்று கொண்டிருந்த தாசி, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசுகையில், தான் எப்போதும் கொசோவோ மக்களின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்துக்காகவே செயற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, போரின் போது தேசிய வீரார்களாகப் பார்க்கப்பட்ட ஹாஷிம் தாசி மற்றும் ஏனைய மூவருக்கும் ஆதரவாக கொசோவோவின் தலைநகரான பிரிஸ்டினாவில் (Pristina) ஆயிரக்கணக்கான மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், சாட்சிகளை அச்சுறுத்தியதாக தாசி மீது சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு தனிப்பட்ட வழக்கின் விசாரணை இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டார் கண்டனம்!

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. புனிதத்…

45 0 0
உலக செய்திகள்

அதானியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்த டிக்டொக் நிறுவுனர்

டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்மை செல்வந்தராக உருவெடுத்துள்ளார். ங்…

64 0 0
உலக செய்திகள்

சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக ஹவூதி அமைப்பினர் அறிவிப்பு!

யேமனின் மஃரிப் பகுதிக்கு மேல் சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தி ஒன்றை, தரைவழி-வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். இந்த…

41 0 0
உலக செய்திகள்

சூடானில் தங்கச் சுரங்க விபத்து : 70 ற்கும் அதிகமானோர் உயி@ரிழப்பு!

சூடானின் மேற்கு கோர்டோஃபான் (West Kordofan) மாநிலத்தில் அமைந்துள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து வீழ்ந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அல்-நஹூத் (al-Nuhud) நகருக்கு…

46 0 0