104ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!
104ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு ‘அமைதியான உலகிற்கு கூட்டுறவு’ என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் ஏற்பாடு செய்த கூட்டுறவு தின விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்திலிருந்து கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபம் வரை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் கலந்து கொண்டார்.