உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
52 பார்வைகள்

எதிர்காலத்தில் அரசியல் நிலைமைகள் மாற்றமடையும் பட்சத்தில் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமல் ராஜபக்ஷவுக்கு ஏற்படக்கூடும் என ஜனசெத்த பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நலன் விசாரிப்பதற்காக வியாழக்கிழமை (17) அங்கு சென்று அவரைச் சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்திற்கு அனைவரும் தலைவணங்க வேண்டும் என்றும், நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் திருட்டு அல்லது ஊழல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

எனினும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது திருடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதில் அரசாங்கம் கவனஞ் செலுத்த வேண்டும் என்றும், வெறுமனே வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது மட்டும் போதாது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் இருப்பதை நாம் பார்க்கின்றோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை; ஏனையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அந்தந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் நாமல் ராஜபக்ஷ இன்னும் இளைஞராக உள்ளார். அரசியல் களத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஒரு பக்கம் இருப்பவர்கள் மறுபக்கம் செல்லலாம்; அரசியல் நிலைப்பாடுகளும் மாறக்கூடும் என்பதால், எதிர்காலத்தில் நிலைமைகள் தலைகீழாக மாற வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.

சுமார் 60 இலட்சம் வாக்குகளில் ஒரு பகுதியினர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர் என்றும், அந்த மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தெரிவு செய்யப்பட்ட சிலரை மட்டும் இலக்கு வைக்காமல், தவறிழைத்த அனைவரையும் கைது செய்து சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்புகளை மீட்டெடுப்பதற்கும், கிடைக்க வேண்டிய வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

36 0 0
இலங்கை செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணை சர்ச்சைக்கிடையே சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரிலுள்ள பிரபல…

30 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

31 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

44 0 0