கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்து ச*டலம் மீட்பு.!
ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலிம்ப சந்தியருகே உள்ள கால்வாய்க்கு மறுபுறமுள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இன்று வியாழக்கிழமை (17) பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, ஹொரனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சடலம் தொடர்பிலான நீதவான் பரிசீலனை இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஹொரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.