உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

கொட்டகலையில் பார்வைக் குறைபாடுடைய 100 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

இலங்கை செய்திகள் 59 நிமிடங்கள் முன்
46 பார்வைகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, இன்று 17 ம் திகதி கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் இன்று 17ஆம் திகதி கொட்டகலை பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபையினால் பல்வேறு சமூகநல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குள் வசிக்கும், பார்வைக் குறைபாடு காரணமாக அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களது பார்வைக் குறைபாட்டுக்கு ஏற்ற வகையில் மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், பரிசோதனையின் போது மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட சிலருக்கு மேலதிக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான சேவைகளை நேரடியாக வழங்கும் வகையில் இந்த சமூகநல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் ராஜவீரன்,ஆளும்கட்சியின் உபதலைவி யாகுலமேரி உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பேருந்தில் தவறவிட்ட பெறுமதிமிக்க பொருட்களை மீட்டு ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துனருக்கான கௌரவிப்பு

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நேற்று புதன்கிழமை முல்லைத்தீவிற்கு பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பெறுமதியான நகை மற்றும் பணத்துடன் தவறவிட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

44 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

42 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

42 0 0