உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

புதிய அரசியலமைப்பு நிச்சயமாக கொண்டுவரப்படும்.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
29 பார்வைகள்

நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று நிச்சயமாக கொண்டுவரப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது குறித்த நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டல்களுக்கு அமையவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் எனக் கூறிய அவர், 20ஆவது திருத்தம் என்பது தற்போதைய அவசர தேவையை நிவர்த்தி செய்வதற்காகவே முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, புதிய அரசியலமைப்பு ஒன்றை நாட்டில் உருவாக்குவது தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் இடம்பெற்ற பிரதான வாக்குறுதி எனத் தெரிவித்த அமைச்சர், அதில் அரசாங்கம் மிக உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தனித்து உருவாக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொதுமக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பரந்த அளவிலான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை முன்னெடுத்து, அவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொட்டகலையில் பார்வைக் குறைபாடுடைய 100 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, இன்று 17 ம் திகதி கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள்…

43 0 0
இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

42 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

38 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

40 0 0