உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

மட்டக்குளியில் இடம்பெற்ற கோர விபத்து; சாரதி போ*தைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
47 பார்வைகள்

கொழும்பு, மட்டக்குளி, பெர்குசன் வீதியில் நேற்று (17) புதன்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய காரைச் செலுத்திய மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து நடந்த சமயத்தில் குறித்த சாரதி கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்றைச் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்களாவர்.

இந்த சம்பவம் குறித்து மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொட்டகலையில் பார்வைக் குறைபாடுடைய 100 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, இன்று 17 ம் திகதி கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள்…

43 0 0
இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

42 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

38 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

40 0 0