உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு மரநடுகை.!
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் மூன்றாம் நாளை முன்னிட்டு, “சுற்றாடலும் மர நடுகை தினம்” எனும் கருப்பொருளின் கீழ் கொட்டகலை பிரதேச சபை வளாகம் தொடக்கம் கொட்டகலை நகரம் வரையில் ஓசோன் படை பாதுகாப்பு தொடர்பான நடைபவனி மற்றும் கொமர்சல் ஈரநிலப் பகுதியில் மரநடுகை வேலைத்திட்டம் நேற்று கொட்டகலை பிரதேச சபையின் கௌரவத் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உப தலைவர் யாகுல மேரி ,கௌரவ உறுப்பினர்களான நந்தகோபால் பாஸ்கரன், பொன்னையா ரவிச்சந்திரன், சுரேஷ், லெட்சுமன் விஸ்வநாதன், கணபதி கண்ணதாசன், அமித்த ஆனந்த, சுப்பையா மகேந்திரன், கோவிந்தராஜ் நேசமலர், சாந்தினி, ரசிகா ஜீவனி, ராஜேந்திரன், செயலாளர் திரு. சிவராம் ராஜவீரன் ஆகியோருடன் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கலந்துகொண்டனர்.





