வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரும் ஹம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, நேற்று (01) மேற்கொண்ட சிறப்பு கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மிரிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.