உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

நெடுங்கேணியில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 43 நிமிடங்கள் முன்
65 பார்வைகள்

மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் பாதிப்புகள் தொடர்பில் நெடுங்கேணியில் தெளிவூட்டல் மற்றும் கூட்டுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நேற்று (01) வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேசசபை கேட்போர் கூடத்தில், நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் “இயற்கையை பாதுகாப்பது எமது உரிமை” என்ற தொனிப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, திட்டத்தினால் இயற்கை வளங்கள், வனஜீவராசிகள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். விஜயமோகன், பிரதேசசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சூழலியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரும் ஹம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும்…

70 0 0
இலங்கை செய்திகள்

மனித உரிமை வழக்குகளில் அரசு தாமதம் – HRW

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதனால்,…

18 0 0
இலங்கை செய்திகள்

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம்…

57 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி14 வயது சிறுவன் உயிரிழப்பு!

பொலன்னறுவை, சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்லேகம பகுதியைச் சேர்ந்த சிறுவன்,…

53 0 0