நெடுங்கேணியில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் கலந்துரையாடல்
மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் பாதிப்புகள் தொடர்பில் நெடுங்கேணியில் தெளிவூட்டல் மற்றும் கூட்டுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நேற்று (01) வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேசசபை கேட்போர் கூடத்தில், நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் “இயற்கையை பாதுகாப்பது எமது உரிமை” என்ற தொனிப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, திட்டத்தினால் இயற்கை வளங்கள், வனஜீவராசிகள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். விஜயமோகன், பிரதேசசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சூழலியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.