நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!
திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.
குறித்த நபர் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.