மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி ஆரம்பம்
மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆர்வம், விளையாட்டுத்திறன் மற்றும் சமூக உணர்வை மையமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.
மட்டக்களப்பின் லேக் வியூ டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெறுகின்றன.
இளைஞர்களின் பங்கேற்பு, ஆரோக்கியம், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை மற்றும் நட்புறவை வளர்க்கும் களங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ரோட்டராக்ட் கழகம் இப்போட்டிகளை ஒழுங்கமைத்துள்ளது.
ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ் என்பது வெறுமனே ஒரு வெற்றிக் கோப்பைக்கான போட்டி மட்டுமல்ல, அது மட்டக்களப்பில் விளையாட்டு சிறப்பையும் ஒற்றுமையையும் கொண்டாடும் ஒரு பெருவிழாவாகக் கருதப்படுகிறது.












