நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!
சிறிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுகெலே குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய நபரை மீட்டு தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.