உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பத்தாவது தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கை கடற்படையினருக்கு 5 பதக்கங்கள்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
52 பார்வைகள்

பங்களாதேஷில் நடைபெற்ற 10 ஆவது தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படையினர் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பங்களாதேஷ் கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டிகள், டாக்கா நகரில் அமைந்துள்ள ‘Shaheed Shorawardi’ உள்ளக விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த ஏழு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று ஆண் மற்றும் பெண் வீரர்கள் வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டியில், ஆண்களுக்கான 50 உட்பட்ட தனிநபர் குமிதே பிரிவில் போட்டியிட்ட லீடிங் சீமன் ஏடிஎன்எஸ் ஆரியரத்ன வெண்கலப் பதக்கமொன்றை வென்றார்.

அத்துடன், பெண்களுக்கான 61 கிலோ கிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே மற்றும் குழு குமிதே நிகழ்வுகளில் போட்டியிட்ட ஏபல் சீமன் பி.எல்.எம். நெத்மினி இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தனதாக்கினார்.

மேலும், பெண்களுக்கான 68 கிலோகிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே மற்றும் குழு குமிதே நிகழ்வுகளில் போட்டியிட்ட லீடிங் சீமன் கேஏசி துலாஞ்சலி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

இந்த வெற்றிகளின் மூலம் இலங்கை கடற்படையினரின் விளையாட்டுத் திறமைகள் சர்வதேசப் போட்டித் களத்தில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்படையில் கராத்தே விளையாட்டை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச மட்டத்திலான திறமைமிக்க வீரர்களை உருவாக்குவதற்கும் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான திட்டங்களின் வெற்றியை இந்தச் சாதனை தெளிவாகப் பிரதிபலிக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

22 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0